Header Ads



கொழும்பில் ஜனவரி முதல், யாசகத்திற்க்கு தடை

கொழும்பு நகரில் யாசகத்தை தொழிலாக மேற்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.

கொழும்பு நகரில் 600க்கும் அதிகமானவர்கள் யாசகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை உரிய புனருத்தாபன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளாதாகவும்,

தொழிலாக யாசகத்தில் ஈடுபடுவோர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அந்த தொழிலை கைவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வாழ்கையை நடாத்திச் செல்ல முடியாதவர்கள் நகர நன்கொடை ஆணையாளரை சந்திக்குமாறும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.