Header Ads



இலங்கை தெரு நாய்களுக்காக, பிரித்தானிய பெண்ணின் தியாகம்


பிரித்தானியாவில் வாழும் பெண் ஒருவர் இலங்கையில் முன்னெடுக்கும் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இலங்கையிலுள்ள தெரு நாய்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த Rachel Schofield என்ற பெண் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டதன் பின்னர் 3 மில்லியன் தெரு நாய்கள் உள்ளதை அவதானித்த அந்த பெண் அவற்றிற்காக சேவை செய்வதற்கு முன் வந்துள்ளார்.

நாய்களை பாதுகாப்பதற்காக அவர் தனது PHD ஆய்வுகளை கைவிட்டுள்ளார். தனது வீட்டை விற்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், Wigton பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடியேறவுள்ளார். அத்துடன் அவரால் முன்னெடுக்கப்படுகின்ற தொண்டு நிறுவனம் தொடர்பில் ஆர்வம் செலுத்தவுள்ளதுடன், சிறிய கடை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

ஹிக்கடுவ பகுதிக்கு அவர் விஜயம் மேற்கொண்டிருந்த போது கழு என்ற தெரு நாய் ஆபத்தான நிலையில் இருப்பதனை அவதானித்து அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

தெரு நாய் கழு ஆபத்தான நிலைமையில் இருந்து மீண்டு வந்துள்ளது. இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அது ஒரு கண்ணை இழந்துள்ளதுடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

பிரித்தானியாவின் Workington பகுதியில் உள்ள கடையில் கிடைத்த வருமானத்தில் நாய்களை மீட்பதற்கு அவர் செயற்படுவதாக சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் இலங்கைக்கு வருகைத்தந்தவர் 10 நாட்களில் 273 நாய்களை அவர் காப்பாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கை முழுவதும் வாழும் தெரு நாய்களையும், காயமடைந்த, உடல் உறுப்புகள் சேதமடைந்த நாய்களை பாதுகாப்பதற்கும் அவர் தொடரந்து செயற்படவுள்ளார்.

நாய்கள் மீது கொண்டுள்ள பிரியம் காரணமாக தனது தொண்டு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கவுள்ளார். யாராவது தன்னார்வமாக உதவ விரும்பினாலும் உதவ முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.