மர்மக் காய்ச்சலால் முல்லைத்தீவில் 9 பேர் மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்குள் காய்ச்சல் காரணமாக 9 பேர் உயிரிழந்தமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து வைத்தியக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்றுள்ளது.
முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த இனந்தெரியாத காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.
தொடர்ச்சியான காய்ச்சலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 9 பேரே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கொழும்பு தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மற்றும் ஆய்வகத்தின் கவனத்துக்கு சுகாதாரத் திணைக்களம் கொண்டு சென்றது.
இதையடுத்தே முல்லைத்தீவு மாவட்டத்தில் கொழும்பிலிருந்து சென்ற மருத்துவக் குழுவால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் தடுப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Post a Comment