Header Ads



சவூதிக்கு சென்ற 6 பேரை காணவில்லை - தகவல் தெரிந்தால் அறிவிக்கலாம்


சவூதி அரே­பி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்ற ஆறு பேர் தொடர்பில் எந்த தக­வலும் இல்­லை­யென தெரி­வித்து அவர்­க­ளது குடும்­பத்­தினர் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இவர்கள் தொடர்­பான தக­வல்­களை அறிந்து கொள்­வ­தற்­காக பொது­மக்­களின் ஒத்­து­ழைப்பை இலங்கை வெளி­நாட்டு பணியம் எதிர்­பார்க்­கின்­றது.

குறிப்­பாக சவூ­தியில் பணி புரி­ப­வர்கள் கீழே பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்­தி­ருந்தால் பணி­ய­கத்தின் வெளி­நாட்டு தொடர்பு பிரிவின் 011 -4379328 என்ற இலக்­கத்­துக்கோ அல்­லது பணி­யத்­துக்கு எழுத்து மூல­மா­கவோ அறி­விக்­கு­மாறு பணி­யகம் கேட்­டுக்­கொள்­கின்­றது.

சவூதி அரே­பி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்று இது­வரை தகவல் இல்­லா­த­வர்­களின் விபரம் வரு­மாறு, எம்.எம். ஜவா­ஹிரா, ஆர். மல்­லிகா பொடி மெனிக்கே, ஆர்.டி. பிரி­யந்தி, சமன்தா குமாரி , யோகேன்திரன் மகேன்திரமணி, நிலமனி தென்னகோன்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

No comments

Powered by Blogger.