சவூதிக்கு சென்ற 6 பேரை காணவில்லை - தகவல் தெரிந்தால் அறிவிக்கலாம்
சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்ற ஆறு பேர் தொடர்பில் எந்த தகவலும் இல்லையென தெரிவித்து அவர்களது குடும்பத்தினர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை வெளிநாட்டு பணியம் எதிர்பார்க்கின்றது.
குறிப்பாக சவூதியில் பணி புரிபவர்கள் கீழே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவின் 011 -4379328 என்ற இலக்கத்துக்கோ அல்லது பணியத்துக்கு எழுத்து மூலமாகவோ அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கின்றது.
சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்று இதுவரை தகவல் இல்லாதவர்களின் விபரம் வருமாறு, எம்.எம். ஜவாஹிரா, ஆர். மல்லிகா பொடி மெனிக்கே, ஆர்.டி. பிரியந்தி, சமன்தா குமாரி , யோகேன்திரன் மகேன்திரமணி, நிலமனி தென்னகோன்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment