52 பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாக, 106 வயதை தாண்டிய முதியவர்
மத்துகம பகுதியை சேர்ந்த 106 வயதான W.A.லிவேரிஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரான லிவேரிஸ் அவர்கள் தற்போது ஓய்வூதிய தொகையை பெற்று வருகிறார்.
எட்டு பிள்ளைகளின் தந்தையான அவர் தற்போது மூத்த மகனான ஓய்வு பெற்ற அதிபரின் வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.
1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்தவர் 1950ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி திணைக்களத்தில் சேவையில் இணைந்துள்ளார்.
குறிப்பிடத்தக்க கால அளவு அங்கு சேவை செய்தவர் கடந்த 52 வருடங்களாக ஓய்வூதியம் பெற்று வருகின்றார்.
தற்போது வரையில் 52 பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாக லிவேரிஸ் மாறியுள்ளார். அவர் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றார்.
Post a Comment