Header Ads



தேர்தலில் போட்டியிடும் 4 பேர் நள்ளிரவில் கைது

கண்டி - உடுதும்பர - கலுன்தென்ன பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த உடுதும்பர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் செனரத் பண்டார உள்ளிட்ட நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது , அவர்களிடம் இருந்து 83 சுவரொட்டிகள் மற்றும் முன்னாள் தலைவரின் ஜூப் ரக வாகனமும் காவற்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் கடந்த கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு உடுதும்பர பிரதேச சபைக்கு தெரிவான இவர் , இம்முறை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னிணியின் கீழ் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.