Header Ads



வர்த்தகரின் சகோதரரை கடத்தி 400 இலட்சம் கப்பம் கோரல் - 50 இலட்சம் வாங்கியபின் விடுதலை

வர்த்தகர் ஒருவரின் சகோதரரை கடத்தி 50 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காலி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் சகோதரர் ஒருவரை கடத்திச் சென்று 50 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வர்த்தகரின் சகோதரர் கடந்த 21ஆம் திகதி அஹங்கம, பொரலிகெட்டிய பிரதேசத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக மோட்டார் வாகனமொன்றில் சென்றுள்ளார்.

ஹபராதுவ - களுபுவே பிரதேசத்தில் வைத்து தமது சகோதரர் கடத்தப்பட்டதாக வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளார்.

தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி சகோதரர் கடத்தப்பட்டு விட்டதாகவும், 400 இலட்சம் ரூபா கப்பம் வழங்குமாறு கோரப்பட்டதாகவும் பின்னர் கப்பத் தொகையை 50 இலட்சம் ரூபா வரையில் குறைத்துக் கொண்டதாகவும் வர்த்தகர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஹபராதுவ பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றுக்கு அருகாமையில் 50 இலட்சம் ரூபா பணத்தை கொண்டு சென்று வைத்ததாகவும் பின்னர் தம்பியை விடுதலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.