இன்னும் 3 வாரங்களில், தேசிய அரசாங்கத்தில் மாற்றம்..?
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் மத்திய குழு கூட்டம் உட்பட்ட சகல கலந்துரையாடல்களிலும், இது குறித்த ஏகமனதான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment