Header Ads



ஈராக்கில் ஒரே நாளில் இன்று 38 பேருக்கு தூக்கு!


குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு ஈராக்கில் இன்று -14- ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈராக் நாட்டில் பல்வேறு விதமான தீவிரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் 38 பேர் குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தெற்கு ஈராக்கின் நஸ்ரியா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களனைவருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 38 பேருக்கும் இன்று ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 25-ந்தேதி ஒரே நாளில் 42 பேருக்கு அந்நாட்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இன்றுதான் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.