Header Ads



30 ஆம் திகதி ரஷ்யாவுக்கான தேயிலை, ஏற்றுமதி மீள ஆரம்பம்

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் 30ஆம் நாள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 18ஆம் நாளில் இருந்து, எதிர்வரும் 30 ஆம் நாள் வரையான இரண்டு வாரங்கள் நடைமுறையில் இருந்த, ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி தடையினால், சிறிலங்காவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது.

சிறிலங்காவில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சிறிலங்காவின் தேயிலை இறக்குமதிக்கு ஒரு நாடு தடை விதித்தமை இதுவே முதல்முறை.

இந்த தடை நீக்க அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக, கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அன்ஸ்லெம் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.