Header Ads



ஒரேநாளில் அதி​வேகப்பாதையில் 30 மில்லியன் வருமானம்


சனிக்கிழமை இரவு 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் சுமார் 1,50,000 வாகனங்கள் அதிவேகப் பாதையில் பயணித்துள்ளதாக அதி​வேகப் பாதை பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பணிப்பாளர் ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 30 மில்லியனுக்கு அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும்,  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியேறிய அனைத்து வாகனங்களும் ஒரே காலப்பகுதிக்குள் கொழும்பிற்குள் நுழையும் வாய்ப்பு உள்ளதால் விசேட பணம் செலுத்தும் பிரிவு ஒன்றை திறக்கவுள்ளதாகவும் ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அதிவேகப் பாதைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை தவிர ஏனைய இடங்களில் வாகனங்கள் நிறுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Goverment should build more highways coming years.We have only 150km long highways our country that not enough.We need more highways Colombo to North and Eastern if don´t do properly that roads in future more more accidents.

    ReplyDelete

Powered by Blogger.