Header Ads



முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி, 2 குழுக்களிடையே முரண்பாடு - தலதா தலையீடு

-ARA.Fareel-

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு அங்­கத்­த­வர்களிடையே இரு வேறு­பட்ட முரண்­பா­டான கருத்­துகள் இருந்தால் அவற்றை அறி­வி­யுங்கள். இரு வேறு­பட்ட அறிக்­கை­க­ளையும் சமர்ப்­பி­யுங்கள் என  தலதா அத்­து­கோ­ரள வேண்டிக் கொண்டார். அவை தொடர்பில் நீதி­ய­மைச்சு ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்ளும் என நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் தனியார் சட்­ட­தி­ருத்த சிபார்சுக் குழுவின் தலைவர்  ஓய்வு பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­மைச்சர் சலீம் மர்­சூபை வேண்டிக் கொண்டார்.

குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் மற்றும் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­தி­களை நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள நேற்று முன்­தினம் மாலை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த சிபார்சு பணி­களின் தாமதம் அதற்­கான காரணம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார். 

ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் குழுவின் செயற்­பா­டுகள் தொடர்பில் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் விளக்­க­ம­ளித்தார். 

சட்­டத்­தி­ருத்த சிபார்சுக் குழு தனது அறிக்­கையை ஏற்­க­னவே தயா­ரித்து விட்­ட­தா­கவும் அறிக்­கையில் குழு அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு கடந்த 26 ஆம் திகதி ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் குழு அங்­கத்­த­வர்­களில் சிலர் கையொப்­ப­மிட்டு வேறோர் அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளார்கள். அவ்­வ­றிக்கை, குழு ஏற்­க­னவே தயா­ரித்­தி­ருந்த அறிக்­கையின் சிபார்­சு­க­ளுக்கு முரண்­பட்­டுள்­ளன. தற்­போது இரு அறிக்­கைகள் குழு­விடம் இருக்­கின்­றன என்றார். 

இதற்குப் பதி­ல­ளித்த நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள ‘இரு முரண்­பா­டான கருத்­துகள் கொண்ட அறிக்­கைகள் இருந்தால் பிரச்­சி­னை­யில்லை. அவற்றைச் சமர்ப்­பி­யுங்கள். நீதி­ய­மைச்சு அறிக்­கை­களை ஆராய்ந்து தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் என்றார்.

மாற்றுக் கருத்துக் கொண்­ட­வர்கள் சமர்ப்­பித்த அறிக்­கையில் 7 பேர் கையொப்­ப­மிட்­டுள்­ளார்கள். இவ்­வாறு கையொப்­ப­மிட்­ட­வர்­களில் பலர் கடந்த குழுவின் அமர்­வுக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. அதனால் அந்த சிபார்­சுகள் தொடர்பில் அன்று ஆரா­யப்­ப­ட­வில்லை. குழு ஏற்­க­னவே தயா­ரித்­துள்ள அறிக்­கையை சிலர் ஏற்றுக் கொள்­ளா­த­தி­னாலே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அறிக்கை ஷரீ­ஆ­வுக்கு முர­ணா­னது என்­கி­றார்கள். 

இதே­போன்ற பிரச்­சினை 1959 ஆண்­டிலும் ஏற்­பட்­டது. சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு 1959 ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட குழு­விலும் முஸ்­லிம்கள் கருத்து வேறு­பா­டு­களை வெளி­யிட்­டதால் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் ஏனைய இனங்­களின் சட்­டங்கள் திருத்­தங்­க­ளுக்­குள்­ளா­கின. 

குறைந்த எண்­ணிக்­கை­யி­லான உல­மாக்கள் முஸ்லிம்  தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் தேவை­யில்லை என்­கி­றார்கள். ஆனால் நளீ­மி­யாவில் பயின்­ற­வர்கள் போன்ற உல­மாக்கள் சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்கள் தேவை என்­கி­றார்கள்.

குழு அங்­கத்­த­வர்­க­ளி­டையே –முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தாலும், இரு அறிக்­கைகள் தயா­ராக இருந்­தாலும் முரண்­பா­டு­களைக் களைந்து ஒற்­று­மை­யாக தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. சமூக நலனில் அக்­க­றை­யுள்­ள­வர்கள் பலர் எம்­முடன் கலந்­து­ரை­யாட வரு­கி­றார்கள். ஜமா­அத்தே இஸ்­லாமி வெள்­ளிக்­கி­ழமை (இன்று) எம்மைச் சந்­திக்­கி­றார்கள்.

இரண்டு கார­ணங்­க­ளி­னாலே குழுவின் அமர்­வுகள் சிறிது கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்­டன. பொது­ப­ல­சே­னாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை உக்கிரமடைந்திருந்த நிலையில் நாம் தாமதமானோம். அடுத்து 2014 இல் நான் சுகயீனமாக இருந்தபோது சிறிது தாமதமானதேயன்றி வேண்டுமென்றே தாமதங்கள் ஏற்படுத்தப்படவில்லை. 

கருத்து முரண்பாடுகள் கொண்டுள்ள குழு அங்கத்தவர்கள் இது விடயத்தில் ஒன்றுபடாது விடின் இரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.