2 பேரை கொன்றவனுக்கு, பழங்கள் கொடுத்து வழியனுப்பிய மக்கள்
நவகத்தேகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருவரின் உயிரிழப்புக்கும் காரணமாக இருந்த காட்டு யானை வனவிலங்குத் துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு ஹொரவப்பொத்தனை யானை பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நவகத்தேகம ரம்பகனயாகம பிரதேசத்தில் வனவிலங்குத் துறை அதிகாரிகள் சில தினங்களாக மேற்கொண்ட முயற்சியின் பின்னர் இந்த யானை பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த யானை வனவிலங்குத் துறை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹொரவப்பொத்தானை பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த யானையின் தாக்குதலினால் இருவர் இப்பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதோடு, பலர் இதன் தாக்குதலினால் பலத்த காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதோடு, ஏராளமான விவசாய செய்கைகளையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இந்த யானை மக்களுக்கு பெரும் தொல்லைகளை வழங்கிய போதிலும் அந்த யானை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அம்மக்க ளால் அதற்கு வாழைப்பழம் மற்றும் பழவகைகளும் வழங்கப்பட் டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment