யானையில் 22 கட்சிகள் சவாரி, இழுபறி முடிந்து, ரணிலும் பச்சைக் கொடி
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அனுமதியளித்துள்ளார்.
அதன்பின்னர் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிமின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின்கீழ் 22 கட்சிகள் மற்றும் அமைப்புகள் போட்டியிடுகின்றன. இவற்றுக்கான இடஒதுக்கீட்டில் கடும் இழுபறி நிலவிவந்த நிலையிலேயே நேற்று அந்தச் சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
Post a Comment