Header Ads



2025 இல் நாமலை ஜனாதிபதியாக்க, மஹிந்த முயற்சிக்கிறார்..!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து தனது எதிர்கால இலக்கை நிறைவேற்ற முயற்சிப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இணைக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மகிந்த, நாமல், பசில் ராஜபக்ச ஆகியோரே சீர்குலைத்தனர்.

இவர்கள் தமது தனிப்பட்ட இலக்கை அடைய மேற்கொண்ட வேலைத்திட்டமே இதற்கு காரணம்.

இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மீது அதிருப்தியடைந்தவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோல்வியில் தமது பாதுகாப்பு உறுதிப்படும் என பசில் ராஜபக்ச எண்ணுகிறார். இதன் காரணமாகவே இரண்டு தரப்பும் இணைவதை அவர் எதிர்க்கின்றார் என எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.