Header Ads



இலங்கையில் 13 செய்தி, இணையங்களுக்கு தடை

நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், பல செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இலங்கை அரசாங்கத்தினால் 13 ஊடக இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மஹிந்த ஆட்சியை விடவும் சமகால அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் அதிகரித்துள்ளதாக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் கூட்டு அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த 2015ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள பிரபல ஊடகமொன்று மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இணையத்தள முடக்கங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒரு தகவல் கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த 13 வலைத்தங்களில் 4 ஜனாதிபதி செயலக ஆணைக்கமைய முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி புகழுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமை தொடர்பில் 4 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இரண்டு இணையத்தளங்கள் போலியான செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளது. மற்றொரு இணையத்தளம் யாழ். நீதவானுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 இணையத்தளங்கள் ஆபாச செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. தடை செய்யப்பட்ட இணையத்தளங்களின் பெயர்களை இங்கு குறிப்பிட முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.