Header Ads



யாழ்ப்பாணத்தில் 125 வேட்புமனுக்கள் - மஹிந்த அணியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், 125 வேட்புமனுக்கள் தகுதி பெற்றுள்ளதுடன், 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் திகதி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் 125 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

நிராகரிக்கப்பட்ட 5 வேட்புமனுக்களில் ஒரு சுயேட்சைக்குழுவும், மஹிந்த அணியான பொதுஜன பெரமுன முன்னணியின் 4 வேட்புமனுக்களும் அடங்குவதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.