Header Ads



10 நாட்­க­ளாக படுக்­கையில் கிடக்கிறேன் - கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல

நான்  கடந்த 10 தினங்­க­ளாக சுக­வீ­ன­முற்று படுக்­கையில் கிடக்­கின்றேன். இந்­நி­லையில்  எவ்­வாறு நான்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து அர­சாங்­கத்­துடன் இணை­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த முடியும் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல  கேள்வி எழுப்­பினார். 

மூழ்­கிக்­கொண்­டி­ருக்கும் கப்­பலில் யாரும் ஏற­மாட்­டார்கள். அதே­போன்று மக்­களின் செல்­வாக்கை இழந்­து­கொண்­டி­ருக்கும்  இந்த அர­சாங்­கத்­துடன் நான் இணைந்­து­கொள்­ள­மாட்டேன் என்றும் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல சுட்­டிக்­காட்­டினார். 

கூட்டு எதி­ர­ணியை   பிர­தி­நி­தித்­துவம் செய்யும்   கண்­டி­மா­வட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர­சாங்­கத்தில் இணைந்து  ஊட­கத்­துறை  இரா­ஜாங்க அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக  வெளி­வரும் தக­வல்கள் குறித்து வின­வி­ய­போதே  அவர்  இந்த விட­யங்­களை கூறினார்.   இது­தொ­டர்பில் கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல கேச­ரிக்கு மேலும்  கருத்து வெளி­யி­டு­கையில்;

நான் அர­சாங்­கத்தில் இணைந்து அமைச்சுப் பத­வியை பெற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்டு வரு­கின்­றன. ஆனால் அவ்­வாறு நான் இணைந்­து­கொள்ள போவ­தில்லை.  மேலும் நான் ஜனா­தி­ப­தியை சந்­திக்­க­வி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

நான் கடந்த 10 நாட்­க­ளாக சுக­வீ­ன­முற்று  படுத்த படுக்­கையில் இருக்­கின்றேன். இன்­றுதான் ( நேற்று) சற்று குண­ம­டைந்து தேர்தல் பணி­களில் ஈடு­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்றேன். இந்­நி­லையில் கடந்த 10 நாட்­க­ளாக  படுக்­கையில்  இருந்த நான் அரச  தரப்­புடன் இணை­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த முடியும்.  அது­மட்­டு­மன்றி எந்­த­வொரு மனி­தனும் மூழ்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பலில் ஏறப்­போ­வ­தில்லை. 

அதே­போன்று  மூழ்­கி­கக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பல்­போன்று   காட்­சி­ய­ளிக்­கின்ற அர­சாங்­கத்தில்  இணைந்­து­கொள்ளும்  எண்ணம் எனக்­கில்லை இதனை நான் மிகவும் உறு­தி­யாக தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். அர­சாங்கம் நாளுக்கு நாள் மக்­களின் செல்­வாக்கை இழந்து வரு­கின்­றது. 

கடந்த தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள்   நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாங்கம் தொடர்பில் மக்கள் பாரிய அதிருப்தியுடன்  உள்ளனர். அந்த விடயத்தை வைத்தே நாங்கள் தேர்தலில்  ஈடுபடுகின்றோம். எனவே அவ்வாறன நிலையில் நான் அரசாங்கத்தில்  இணைந்துகொள்வேனா என்று  கேள்வி எழுப்பினார். 

1 comment:

  1. அவுஸ்ரேலியா போய் மருத்துவம் செய்திருக்கலாமே. அவ்வாறு போனால் சனாதிபதி நிதியிலிருந்து மீண்டும் இன்னும் ஒரு 1500 மில்லியன் மக்கள் பணத்தைச் சுருட்ட ஒரு ரை பண்ணலாம்தானே.

    ReplyDelete

Powered by Blogger.