Header Ads



RRT அமைப்பை கலைக்க தீர்­மானம், உடன் மீள்­ப­ரி­சீ­லிக்க முஸ்லிம் சமூகம் வேண்­டுகோள்


(விடிவெள்ளி பத்திரிகையில் 10.11.2017 அன்று வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியும், கட்டுரையும்)

முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்து இன­வாத சக்­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அச்­சு­றுத்­தல்கள் மற்றும் வன்­மு­றை­க­ளின்­போது அவற்றை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்­வதில் முன்­னின்று பாடு­பட்ட முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­களைக் கொண்ட ஆர்.ஆர்.ரி. அமைப்பை கலைத்­து­விடத் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரிய வரு­கி­றது. 

ஆர்.ஆர்.ரி. அமைப்­புக்கும் அதன் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீ­னுக்கு எதி­ரா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் அனா­ம­தேய பிர­சா­ரங்கள் மற்றும் அழுத்­தங்கள் கார­ண­மா­கவே இத் தீர்­மா­னத்தை எடுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக அவ்­வ­மைப்பின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற ஆர்.ஆர்.ரி. அமைப்பின் கலந்­து­ரை­யா­ட­லின்­போதே  இத் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு விரைவில்  வெளி­யி­டப்­படும் என்றும் அவ்­வ­மைப்பின் உறுப்­பி­ன­ரான சட்­டத்­த­ரணி ஒருவர் தெரி­வித்தார். எனினும் குறித்த தீர்­மா­னத்தை உட­ன­டி­யாக மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறும் தொடர்ந்தும் முஸ்லிம் சமூ­கத்தை இன­வாத அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து பாது­காக்கும் வகையில் சட்ட ரீதி­யான பாது­காப்பை வழங்க முன்­னின்று செயற்­ப­டு­மாறும் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் சிவில் சமூக தலை­மைகள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளன. 

2014 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட ஆர்.ஆர்.ரி அமைப்­பா­னது, முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இன­வாத பிர­சா­ரங்­க­ளையும் வன்­மு­றை­க­ளையும் மேற்­கொண்ட பௌத்த கடும்­போக்கு அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக இது­வரை நூற்­றுக்கும் மேற்­பட்ட வழக்­கு­களைத் தாக்கல் செய்­துள்­ளது. 

பௌத்த இன­வாத சக்­தி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் போது­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காத சந்­தர்ப்­பங்­களில், ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள் துணிச்­ச­லுடன் முன்­வந்து பொலிஸ் நிலை­யங்­களில் இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக முறைப்­பா­டு­களைப் பதிவு செய்­த­துடன் நீதி­மன்­றங்­களில் வழக்­கு­களைத் தாக்கல் செய்­த­மையும் இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.
இதன் கார­ண­மாக குறித்த இன­வாத அமைப்­பு­களின் முக்­கி­யஸ்­தர்­க­ளான பௌத்த தேரர்கள் பல வழக்­கு­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­துடன் பலரும் பல தட­வைகள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இறு­தி­யா­கவும் மியன்மார் அக­தி­க­ளுக்கு எதி­ராக அச்­சு­றுத்­தல்­ வி­டுத்த பலர் இன்று வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­மையும் ஆர்.ஆர்.ரி. அமைப்­பினர் தாக்கல் செய்த வழக்­கு­க­ளி­னா­லே­யாகும். 

இந் நிலை­யி­லேயே முஸ்லிம் சமூ­கத்­திற்கு சட்ட ரீதி­யாக பாது­காப்­பையும்  தைரி­யத்­தையும் வழங்கும் வகையில் தொடர்ந்தும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என முஸ்லிம் பிர­தி­நி­திகள் வேண்­டு கோள் விடுத்­துள்­ளனர். 
அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், பொதுச் செய­லாளர், உலமா சபை
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் விடி­வெள்­ளிக்கு கருத்து வெளி­யி­டு­கையில், 

முஸ்லிம் சமூகம் சந்­தித்த இக்­கட்­டான சந்­தர்ப்­பங்­களில் யாரும் செய்ய முன்­வ­ராத பணியை மிகவும் துணிச்­ச­லுடன் செய்து வந்த ஆர்.ஆர்.ரி. அமைப்­பி­னரின் பணிகள் பாராட்­டத்­தக்­க­வை­யாகும். 

கடந்த காலங்­களில் இவ்­வா­றான ஒரு சட்­டத்­த­ர­ணிகள் குழு முன்­வந்து முஸ்லிம் சமூ­கத்­திற்­காக சேவை­யாற்­றி­யி­ராத நிலையில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தலை­மை­யி­லான இளம் துடிப்­பு­மிக்க குழு­வினர் இதற்­காக தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்­டனர்.  

இன­வா­தி­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­களை அவர்­க­ளது சமூ­கத்தைச் சேர்ந்த சட்­டத்­த­ர­ணி­க­ளையே பயன்­ப­டுத்தி எதிர்­கொண்­ட­விதம் சாணக்­கி­ய­மிக்­க­தாகும். இவ்­வா­றான சிறந்த பணியை முன்­னெ­டுத்து வரும் ஒரு சட்­டத்­த­ர­ணிகள் அமைப்பின் மீது விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தையோ அழுத்­தங்கள் வழங்­கப்­ப­டு­வ­தையோ ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. 

இதனைக் கலைத்­து­விட்டால் ஏற்­க­னவே நிலு­வையில் உள்ள வழக்­கு­களை எதிர்­கொள்­வது யார்? எதிர்­வரும் காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு விடுக்­கப்­படும் அச்­சு­றுத்­தல்­களை சட்­டத்தின் மூலம் முறி­ய­டிப்­பது எப்­படி? என­வேதான் ஆர்.ஆர்.ரி. அமைப்­பினர் தமது தீர்­மா­னத்தை வாபஸ் பெற்று வழ­மை­போன்று துணிச்­ச­லுடன் செயற்­பட முன்­வர வேண்டும். அதற்குத் தேவை­யான சகல உதவி ஒத்­தா­சை­களை வழங்க நாம் தயா­ரா­க­வி­ருக்­கிறோம்.

 என்.எம்.அமீன், தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்ட நெருக்­க­டி­யான கால­கட்­டங்­களில் அவற்றை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்­வ­தற்கு எவரும் முன்­வ­ராத நிலையில் மிகவும் துணிச்­ச­லுடன் சில சட்­டத்­த­ர­ணிகள் ஒன்­றி­ணைந்து ஆர்.ஆர்.ரி. அமைப்பை உரு­வாக்கி வழக்­கு­களைத் தொடுத்­தனர். இதன் மூலம் இப் பிரச்­சி­னை­களை ஓர­ளவு தணிக்­கவும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரவும் முடி­யு­மா­க­வி­ருந்­தது. 

இந்த அமைப்பைக் கலைப்­ப­தாக எடுக்­கப்­பட்­டுள்ள தீர்­மானம் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். அத்­துடன் காலத்­திற்குப் பொருத்­த­மற்­ற­து­மாகும். என­வேதான் ஆர்.ஆர்.ரி.யின் தலைவர் சிராஸ் நூர்தீன் உட்­பட இப் பணியில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் தமது தீர்­மா­னத்தை உடன் மீள்­ப­ரி­சீ­லனை செய்­வ­துடன் அமைப்பின் செயற்­பா­டு­களை முஸ்லிம் சமூ­கத்­திற்கு நம்­பிக்­கை­ய­ளிக்கும் வகையில் முன்­கொண்டு செல்ல வேண்டும் என வேண்­டு­கோள்­வி­டுக்க விரும்­பு­கிறேன். 

ஏ.ஆர்.எம்.பதி­யுதீன், பேரு­வளை பிர­தேச சபையின் முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர்  
தர்காநகர் மக்­க­ளுக்கு நம்­பிக்கை தரும் வகையில் செயற்­பட்ட ஆர்.ஆர்.ரி. அமைப்பு கலைக்­கப்­படப் போவ­தாக அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்தேன். எந்­த­வித நல­னையும் எதிர்­பார்க்­காது சமூ­கத்தின் பாது­காப்பை மாத்­தி­ரமே இலக்­காகக் கொண்டு இவ்­வ­மைப்­பினர் எமக்­கு­தவி செய்­தனர்.

2014 ஆம் ஆண்டு அளுத்­கம, தர்கா நகர் பகு­தி­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­களின் பின்னர் அவை தொடர்பில் வழக்­கு­களைத் தாக்கல் செய்து இன்று வரை அவற்றில் ஆஜ­ராகி எமது பிர­தேச மக்­க­ளுக்­காக குரல் கொடுத்து வரு­கின்றனர். குறிப்­பாக எமக்­கேற்­பட்ட அநீ­தியை சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு செல்ல ஆர்.ஆர்.ரி. அமைப்பு மேற்­கொண்ட பணிகள் அளப்­ப­ரி­யவை.

 ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் வெளி­நாட்டுத் தூத­ரக பிர­தி­நி­தி­களை நாம் பல தட­வைகள் நேரில் சந்­தித்து எமக்­கி­ழைக்­கப்­பட்ட அநீ­தியை எடுத்­துக்­கூற ஆர்.ஆர்.ரி. அமைப்பின்  தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் ஏற்­பா­டு­களைச் செய்து தந்தார். குறிப்­பாக ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்யித் ராயித் ஹுசைன், சிறு­பான்மை விவ­கா­ரங்கள் தொடர்­பான ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதாயா, பிரித்­தா­னிய தூதர அதி­கா­ரிகள், இறு­தி­யாக கடந்த மாதம் இலங்­கைக்கு வந்த ஐ.நா. வின் அறிக்­கை­யாளர்  பப்லோ டி கிரீப் ஆகி­யோரை பாதிக்­கப்­பட்ட அளுத்­கம, தர்கா நகர் மக்கள் நேரில் சந்­தித்து தமது பிரச்­சி­னை­களை எடுத்துக் கூற இவ்­வ­மைப்பே வாய்ப்­பையும் தொடர்­பையும் ஏற்­ப­டுத்தித் தந்­தது. 

இந்த அமைப்பின் பணிகள் தர்கா நக­ருக்கு மாத்­தி­ர­மன்றி முழு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் அவ­சி­ய­மாகும். இதனைக் கலைத்தால் பாதிக்­கப்­படப் போவது தர்கா நகர் மாத்­தி­ர­மின்றி முழு முஸ்லிம் சமூ­க­மும்தான். 

இவ்­வா­றா­ன­தொரு இயக்­கத்தை கலைத்­து­விட எவ­ரேனும் கார­ண­மாக இருப்­பார்­க­ளாயின் அவர்கள் சமூகத் துரோ­கி­க­ளாவர். என­வேதான் இயக்க ரீதி­யான, தனி நபர் ரீதி­யான வேறு­பா­டு­களை மறந்து எந்தப் பிரச்­சி­னைகள் வந்­தாலும் மஷூரா அடிப்­ப­டையில் அவற்றைப் பேசித் தீர்க்­கு­மாறு நான் தர்கா நகர் மக்கள் சார்­பாக கேட்டுக் கொள்­கிறேன். 

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் 
இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இடம்­பெற்ற தொலைக்­காட்சி கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் பணிகள் தொடர்பில் சிலா­கித்து கருத்து வெளி­யிட்டார். அவர் அதில் கருத்து வெளி­யி­டு­கையில், 

முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் தொடுக்­கப்­பட்ட வழக்­கு­களை சிங்­கள வழக்­க­றி­ஞர்­கள்தான் முன்­னின்று வாதா­டி­னார்கள் என அசாத் சாலி இந்த நிகழ்ச்­சியில் குறிப்­பிட்ட கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடி­யாது. நான் அறிந்த வகையில் முஸ்லிம் வழக்­க­றி­ஞர்கள் மிகவும் தியா­கத்­தோடும் அர்ப்­ப­ணத்­தோடும் செய்­கி­றார்கள். அவர்கள் இதற்­காக படு­கின்ற கஷ்­டத்தை நான் நேர­டி­யாகப் பார்த்­தி­ருக்­கிறேன். 

ஒரு சட்­டத்­த­ரணி சில சமயங்களில் முஸ்லிம் சமூகம் சார்பான வழக்குகளில் தான் பிரசன்னமாக முடியாத சந்தர்ப்பத்தில் தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து வேறு சட்டத்தரணிகளை அனுப்புவதை நான் கண்டிருக்கிறேன். எனவே நாங்கள் அந்தப் பங்களிப்பை மறந்தோ மறுத்தோ பேச முடியாது. 

ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் போன்றவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகுந்த அர்ப்பணத்துடன் செயற்படுகிறார்கள். அவருக்காக நான் என்றும் பிரார்த்திப்பேன். அவர் எந்தக் கட்சியையோ அமைப்புகளையோ சார்ந்தவர் அல்ல.  எனவே இவ்வாறான பணிகளை நாம் வரவேற்க வேண்டும். பாராட்ட வேண்டும். அவர்களது பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை தொடர்பு கொள்ள பல தடவைகள் முயன்ற போதிலும் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. 

5 comments:

  1. இவ்வமைப்பை கலைத்து விடுவது முஸ்லிம்கள் தற்கொலை செய்வதற்கு சமம்

    ReplyDelete
  2. Insha allah every thing will be fine
    Allah knows best

    ReplyDelete
  3. கெஞ்சி கேட்கிறேன். விமர்சனத்திற்கு பயந்தோ, உயிருக்கு பயந்தோ கலைத்து விடாதீர்கள். எந்த அரசியல் தலைவனிலும் நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
  4. மனத்தூய்மையுடன் அல்லாவுக்காக செயல்படும் இந்த RRT சட்டதரனிகளின் அமைப்பு அவர்களின் நற்சேவையில் நீடிக்க அல்லாஹுவிடம் சதாகாலமும் பிராரதிப்போம் இவர்கள் அதிமான நல்லவேலைகளை மக்களிடம் எந்த எதிர்பார்பும் இல்லாமல் செய்பவர்கள் மேலும் இனவாதியான ஞானசாரவுக்கும் அவர்களின் அல்லகைகளுக்கும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அவர்களின் அட்டகாசங்களை தடுத்தவர்கள் இந்த அமைப்பினருக்கு அல்லாஹு அவர்களின் வாழ்கையில் பரகத் செய்து அவர்களுக்கு மேலும் மேலும் தைரியம் உண்டாக அல்லாஹுவிடம் பிரார்திப்போம்,முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களிடம் மிகவும் பணிவுடன் உங்கள் அமைப்பை களைத்துவிடவேண்டாம் என்று கெஞ்சி கேட்கின்றோம்.

    ReplyDelete
  5. It is not a bold decision to dissolve the RRT. Some individuals and politicians needed to dissolve the RRT. Please for the shake of Allah don’t do that. We are with you.

    ReplyDelete

Powered by Blogger.