Header Ads



யேமனில் மிகப்பெரும் பஞ்சம், முற்றுகையை தளர்த்த சவுதியிடம் கோரிக்கை


ஏமனில் உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகில் கடந்த சில தசாப்தங்கள் காணாத மிகப்பெரிய பஞ்சத்தை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனிதாபிமான கொள்கைகளுக்கான ஐநாவின் மூத்த அதிகாரி மார்க் லோகாக், போரினால் சின்னாபின்னமான ஏமன் நாட்டில் படைகளின் முற்றுகை நிலையை தளர்த்துமாறு செளதி தலைமையிலான கூட்டணியை வலியுறுத்தியுள்ளார்.

செளதி தலைநகரான ரியாத்தை நோக்கி ஹூதிகள் ஏவுகணை ஒன்றை ஏவியிருந்த நிலையில், கடந்த திங்களன்று, ஏமன் நாட்டிற்கு செல்லும் வான், தரை மற்றும் கடல் பாதைகளை கூட்டணி படைகள் அடைத்தன.

ஹூதிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை ரியாத் அருகே வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது.

ஹூதிகளுக்கு இரான் ஆயுதம் அனுப்பி வருவதை நிறுத்தும் நோக்கில் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஆனால், ஹூதிகளுக்கு ஆயுதங்கள் எதையும் வழங்கவில்லை என்று செளதியின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்துள்ளது.

No comments

Powered by Blogger.