Header Ads



முஸ்லிம்களுக்கு, ஞானசாரா எச்சரிக்கை

முஸ்லிம் மதத் தலை­வர்கள் தங்­க­ளது இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் பௌத்தமதத் தலை­வர்­க­ளா­கிய எங்­களால் சிங்­கள இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போய்­விடும். நீங்கள் நிறுத்­தினால் நாங்­களும் நிறுத்­துவோம். இன்றேல் நிலை­மைகள் மோச­ம­டை­வதை  தவிர்க்க முடி­யாது  என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

கிந்­தோட்­டையில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து பிர­தே­சத்தில் சுமுக நிலையைத் தோற்­று­விக்கும் பொருட்டு அர­சியல், மத மற்றும் சிவில் சமூக தலை­வர்கள் கலந்து கொண்ட கூட்டம்  காலி மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், 

கிந்­தோட்டை வன்­மு­றை­களைப் பொறுத்­த­வரை சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட வதந்­தி­களே கார­ண­மாகும். இன்று கத்­தி­க­ளையும் வாள்­க­ளையும் விட நாம் கைகளில் வைத்­தி­ருக்கும் கைய­டக்கத் தொலை­பே­சி­கள்தான் பெரும் ஆயு­தங்­க­ளாக மாறி­யுள்­ளன. 

இந்த சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக பரப்­பப்­பட்ட வதந்­தி­களும் தவ­றான தக­வல்­க­ளுமே அளுத்­க­ம­விலும் ஒரு கல­வரம் வெடிக்கக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. அதுவே இன்று கிந்­தோட்­டை­யிலும் நடந்­துள்­ளது. 

கிந்­தோட்டை சம்­ப­வத்தைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­கள மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த நாம் தயார். ஆனால் அதற்கு முன்­பாக முஸ்லிம் மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். அந்தக் கட­மையை முஸ்லிம் மதத் தலை­வர்கள் செய்ய வேண்டும்.

கிந்­தோட்­டையில் வன்­மு­றைகள் இடம்­பெற்ற அன்­றி­ரவே வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இப் பகு­திக்குள் பிர­வே­சித்­த­மையை நாம் கண்­டிக்­கிறோம். இந்த முஸ்லிம் அமைச்­சர்கள் கிந்­தோட்­டைக்குள் வந்­ததால் சிங்­கள மக்கள் அச்­ச­ம­டைந்­தனர். வெ ளி மாவட்­டத்தைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் எவரும் காலி மாவட்­டத்­துக்குள் வர வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. அதனை இங்­குள்ள மக்கள் பிர­தி­நி­திகள் பார்த்துக் கொள்ளக் கூடாது.

அதே­போன்று இச் சம்­ப­வங்­களின் பின்னர் கைது செய்­யப்­பட்ட அனை­வரும் விடு­விக்­கப்­பட வேண்டும். ஊர­டங்குச் சட்­டத்தை தொடர்ந்து நீடிப்­பதை நாம் விரும்­ப­வில்லை. அவ்­வாறு நீடிப்­பது இங்­குள்ள மக்­களை தொடர்ந்தும் பதற்ற நிலையில் வைத்­தி­ருக்­கவே வழி­வ­குக்கும். எனவே ஊர­டங்குச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதை நாம் எதிர்க்­கிறோம் என்றும் ஞான­சார தேரர் இக் கூட்­டத்தில் மேலும் குறிப்­பிட்டார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பகு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றை­களைத் தொடர்ந்து மறுநாள் சனிக்­கி­ழமை பிற்­பகல் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்தார். சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட சிங்­கள மக்­களின் வீடு­க­ளுக்குச் சென்று நிலை­மை­களை அவ­தா­னித்த அவர் பௌத்த விகா­ரையில் இடம்­பெற்ற கூட்­டத்­திலும் கலந்து கொண்டார். 

ஞான­சார தேரரின் வரு­கையைத் தொடர்ந்து சனிக்­கி­ழமை பிற்­பகல் பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் மத்­தியில் அச்ச சூழ்நிலையொன்று தோற்றம் பெற்றது. எனினும் பொலிசார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. குறித்த இந்த சம்பவத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் மேலே முழுத் தவறும் இருந்தது. மோதுண்ட மறுகணவே அந்த சிங்கள இளைஞன் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஓடித் தலைமறைவாகியதுடன் தனது நண்பனொருவனைத் தொடர்பு கொண்டு அந்த இடத்திற்குச் சென்று தனது மோட்டார் சைக்கிளை மீட்டுத் தருமாறு வேண்டியுள்ளான். அந்த இளைஞனும் வழமையாகவே முஸ்லிங்களை சீண்டும் பழக்கம் கொண்டவன் தான். தனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு வந்த குறித்த இளைஞன் விபத்துக்குள்ளான அந்த மோட்டார் சைக்கிளை அகற்றிக் கொண்டு செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் அவனைத் தடுத்து சம்பந்தப்பட்ட ஓடி ஔிந்த இளைஞனுக்கு வந்து மோதுண்ட குறித்த அப்பாவிப் பெண் விடயத்தில் நீதியாக நடந்து கொள்ளச் சொல்லுமாறு வேண்டியுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத அந்த சிங்கள இளைஞன் மிக மோசமான இனவாத சொற்களைக் கொண்டு முஸ்லிங்களைத் தூற்றிக் கொண்டு செல்லவே பொறுமையிழந்த ஒரு முஸ்லிம் இளைஞன் அவனைத் தாக்கியுள்ளான். (நாட்டு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் இங்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்திருக்கலாம்.) விடயம் பொலிஸ் வரை செல்லவே, அங்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ரூ.25,000.00 நஷ்டஈடு வழங்குவது என்ற இணக்கப்பாட்டுடன் குறித்த சம்பவம் முடிவுக்கு வந்தது.

    ஆனால், மறுதினம் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பின்னேரம் விளையாடி விட்டு சிங்களவர்கள் செரிந்து வாழும் விதானகொட என்ற பாதையால் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை சிங்கள இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளனர். அடிவாங்கிய முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் தமது நண்பர்களைத் திரட்டிக் கொண்டு தம்மைத் தாக்கியவர்களை மீண்டும் தாக்க வந்துள்ளனர். இதன்போது அந்த சிங்கள இளைஞர்கள் அங்கிருந்த ஒரு சிங்கள வீட்டினுள் புகுந்ததால் அவ்வீட்டுக்கு ஒரு சிறிய தேசம் ஏற்பட்டது. ஆனால் சேதத்தினை அதிகரித்துக் காட்டுவதற்காக அவ்வீட்டாரும், குறித்த சிங்கள இளைஞர்களும் தமது கைகளாலேயே அந்த வீடு மற்றும் உபகரணங்களை சேதப்படுத்திக் கொண்டு முஸ்லிங்கள் மீது அதனைப் பலிபோடும் கைங்கரியத்தினையும் செய்துள்ளனர்

    ReplyDelete

Powered by Blogger.