Header Ads



என்ன நடக்கப் போகின்றது..?

நல்லாட்சி அரசாங்கம் நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஆளும் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், விமர்சனம் செய்வதும் அதிகரித்துள்ளது.

இதனால் நல்லாட்சி அரசாங்கம் நகைப்பிற்குள்ளாகியுள்ளது. சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை விமர்சனம் செய்கின்றனர்.

சில அமச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை விமர்சனம் செய்கின்றனர்.

என்ன நடக்கப் போகின்றது? ஒழுக்கமற்ற செயலே அரங்கேறுகின்றது. இவ்வாறு விமர்சனம் செய்வது பாரதூரமான பிழையாகும், இது அரசாங்கத்தின் இருப்பினை மோசமாக பாதிக்கும் என ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.