அவுஸ்ரேலிய போர்க்கப்பல், கொழும்பு வந்தது
அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பலான எச்எம்ஏஎஸ் நியூகாசில் நான்கு நாட்கள் பயணமாக இன்று -14- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
138.1 மீற்றர் நீளமான இந்தப் போர்க்கப்பலில் 184 மாலுமிகள் உள்ளனர். கொழும்பில் தங்கியிருக்கும் போது, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து அவுஸ்ரேலிய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
வரும் 17ஆம் நாள் அவவுஸ்ரேலிய போர்க்கப்பல் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
Post a Comment