Header Ads



அலுங்கின் வீட்டுக்குள், முள்ளம்பன்றி நுழைவது போல..!

தன்னுடைய இடத்தை மகிந்த ராஜபக்சவினால் இல்லாமல் செய்ய முடியாது எனவும் மகிந்தவிற்கு பின்னால் சென்று தான் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நான் மகிந்த ராஜபக்சவிற்கு பின்னால் சென்று அரசியலில் ஈடுபட்டவன் அல்ல. அவரால் எனது இடத்தை இல்லாமல் செய்து விட முடியாது.

நான் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிஷ்யன்.அலுங்கின் வீட்டுக்குள் முள்ளம்பன்றி நுழைவது போல் நாங்கள் மற்றவர்களின் வீட்டுக்குள் புகுந்து கொள்ள மாட்டோம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.