O/L மாணவர்களுடன் கஞ்சா புகைத்த, ஆசிரியர் கைது
கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுடன் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த வேளையில் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பகுதியில் இயங்கி வரும் இரு பிரபல பாடசாலை மாணவர்களுடன் 25 வயதுடைய ஆசிரியரே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர்கள் வசமிருந்த கஞ்சா பொதிகள் ஒன்பதும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
119 என்ற அவசர தொலைபேசி இலக்க தொலைபேசி இலக்க காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் உள்ளிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஆசிரியருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்கள் குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி நன்னடத்தை அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment