Header Ads



பல்டிகள் நடைபெறும் சாத்தியம்..?

தற்­போது ஸ்ரீல.சு. கட்­சி­யுடன் இருந்து கொண்டு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் தொடர்­பு­களைப் பேணி வரும் ஸ்ரீல.சு.கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளுக்கு ஒரு வாரத்­துக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன  முன்­ன­ணியில் இணையப் போவ­தாக ஸ்ரீல.சு.கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்­துள்­ள­தாக பிர­பல சிங்­கள நாளி­த­ழொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 

முன்னாள் அமைச்சர்  பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தாமரை மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­துள்­ளமை தெரிந்­ததே. 

தற்­போ­துள்ள  நிலையில் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு மைத்­திரி தரப்­புடன்  இணையும் சாத்­தி­யங்கள் மிகவும் அரி­தாகக் காணப்­ப­டு­வதால் இந்த கட்சித் தாவல் நடை­பெ­று­வதை தவிர்க்க முடி­யா­தெ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

ஸ்ரீல.சு.கட்­சி­யி­லி­ருந்து வில­கு­வதா? இல்­லையா? என்­பதை தீர்மானித்த ஜனாதிபதி ஜன­வரி 31 ஆம் திகதி வரை கால அவ­காசம் வழங்­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்கும் அந்த  சிரேஷ்ட உறுப்­பினர் அதைப்­ப­யன்­ப­டுத்தி கட்­சியை விட்டு வெளி­யேற முடி­யு­மெ­னவும் இவ்­வாறு  தேர்தல் அண்­மிக்­கும்­போது கட்­சியை விட்டு வெளி­யே­றினால் அது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வெற்­றிக்கு உந்து சக்­தி­யாக அமை­யு­மெ­னவும் தெரி­வித்தார். 

எப்­ப­டி­யி­ருந்தும் ஐ.தே.கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதை தொடர்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க ஜனாதிபதிக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை கால அவகாசம்  இருப்பதாகவும் அந்த உறுப்பினர் தெரி வித்தார். 

No comments

Powered by Blogger.