பல்டிகள் நடைபெறும் சாத்தியம்..?
தற்போது ஸ்ரீல.சு. கட்சியுடன் இருந்து கொண்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் தொடர்புகளைப் பேணி வரும் ஸ்ரீல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணையப் போவதாக ஸ்ரீல.சு.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளதாக பிரபல சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, உள்ளூராட்சித் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளமை தெரிந்ததே.
தற்போதுள்ள நிலையில் மஹிந்த ராஜபக் ஷ தரப்பு மைத்திரி தரப்புடன் இணையும் சாத்தியங்கள் மிகவும் அரிதாகக் காணப்படுவதால் இந்த கட்சித் தாவல் நடைபெறுவதை தவிர்க்க முடியாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீல.சு.கட்சியிலிருந்து விலகுவதா? இல்லையா? என்பதை தீர்மானித்த ஜனாதிபதி ஜனவரி 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் அதைப்பயன்படுத்தி கட்சியை விட்டு வெளியேற முடியுமெனவும் இவ்வாறு தேர்தல் அண்மிக்கும்போது கட்சியை விட்டு வெளியேறினால் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்கு உந்து சக்தியாக அமையுமெனவும் தெரிவித்தார்.
எப்படியிருந்தும் ஐ.தே.கட்சியுடன் இணைந்து செயற்படுவதை தொடர்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க ஜனாதிபதிக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருப்பதாகவும் அந்த உறுப்பினர் தெரி வித்தார்.
Post a Comment