பொலிஸ் அறிக்கை பெற, கட்டணங்கள் உயர்வடைந்தன
வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் உட் பட பலரும் பொலிஸாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் அனுமதி அறிக்கைக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளரின் அனுமதிக்கு அமைய இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இந்த புதிய கட்டண திருத்தங் கள் அமுலுக்கு வருவதாகவும், அதில் தபால் செலவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் அனுமதி அறிக்கைக்காக விண்ணப்பிப் போர், இலங்கையிலிருந்து விண்ணப்பித்து இலங்கை முகவரிக்கு அவ்வறிக்கையைப் பெற்றுக்கொள்ள 1000 ரூபாவும், இலங்கை யிலிருந்து விண்ணப்பித்து வெளிநாட்டு முகவரி ஒன்றுக்கு அந்த அறிக்கையை தபால் ஊடாக பெற்றுக்கொள்ள 1500 ரூபாவும், இலங்கையிலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ இணை யம் ஊடாக அவ்வறிக்கையைப் பெற்றுக்கொள்ள 1500 ரூபாவும் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment