Header Ads



மஹிந்த தரப்­பி­னரில் ஒரு­சாரார், எம்­முடன் கைகோர்ப்பு - சஜித்

அர­சாங்கம் அமுல்­ப­டுத்தும் விசேட அபி­வி­ருத்தி திட்­டங்கள் குறித்து மஹிந்த தரப்­பி­னரில் ஒரு­சாரார் எம்­முடன் கைகோர்த்­துள்­ளமை மகிழ்வை தரு­கின்­றது என வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமை­சசர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

அம்­பாந்­தோட்டை மாவட்­டத் தில் லுனு­கம்­வெ­ஹர கிரா­மத்தில் சிய­து­ரு­கம என்னும் வீட­மைப்பு தொகு­தியை மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

நல்­லாட்சி அரசு ஆட்­சி­பீ­ட­மே­றி­யது முதல் பல்­வே­று­பட்ட அபி­வி­ருத்தி திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நடை­ம­ுறை­ப்­ப­டுத்தி வரு­கின்­றது. சுத்­த­மான குடிநீர், மின் விநி­யோகம், போக்­கு­வ­ரத்­துக்கு உகந்த பாதை உட்­பட பல அடிப்­படை தேவை­களை நாம் கிராம மட்­டத்திலுள்ள மக்­க­ளுக்கு வழங்கி வரு­கின்றோம்.

சுற்­று­சூழல் பாது­காப்பு, உணவு உற்­பத்தி, வீட­மைப்பு நிர்­மாண பணிகள், சிறு­நீ­ரக நோய்க்­கான நிவா­ரணம், ஒவ்வொரு இல்­லங்­க­ளையும் போதை பாவ­னை­யற்ற இல்­லங்­க­ளாக மாற்­றுதல் போன்ற வேலைத்­திட்­டங்­களை நாம் ஆற்­றி­வ­ரு­கின்றோம். கிராம மக்­க­ளது ஜீவ­னோ­பா­யத்தை பலப்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மாகும்.

இன்­றைய ­நி­கழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் மிக நெருக்­க­மாக பணி புரிந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் சூரி­ய­வெவ பிர­தேச சபையின் முன்னாள் உப தலைவர் காமினி ருவான்­பத்­தி­ரன கலந்து கொண்­டி­ருப்­பது எமக்கு உற்­சா­கத்தைத் தரு­கின்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பை சேர்ந்த மேலும் பலர் எமது பணி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு நல்­கி­வ­ரு­கின்­றனர்.  எனது தந்தை ரண­சிங்க பிரே­ம­தாசவின் அடிச்சுவட்டையே நானும் பின்பற்றி வருகின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.