Header Ads



எதிர்ப்பை தீவிரப்படுத்துகிறார் கோத்தபாய

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை எளிய அமைப்பின் ஊடாக விஸ்­த­ரிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகளை முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்தபாய ராஜபக் ஷ மேற்கொண்டுள்ளார்.

எதிர்­வரும் 19ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கேகா­லை­யிலும், 26ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்­திலும், டிசம்பர் 3ஆம் திகதி காலி­யிலும் பாரிய கூட்­டங்­களை நடத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டுகள் இடம்பெற்று வருகின்றன. 

இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரும் நிலையில் தற்­போது வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை வெளியி­டப்­பட்டு அது குறித்த விவா­தங்கள் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்று வரு­கின்­றன. 

இந்­நி­லையில் குறித்த புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் மற்றும் வெளியா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை, உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் ஆகி­யவை நாட் டுக்கு பாரிய ஆபத்து என்றும் குற்றம் சாட்டியுள்ள எளிய அமைப்பு அது தொடர்பில் பெரும்­பான்மை மக்­க­ளி­டத்தில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வருகின்றது. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பிர­தா­னப்­ப­டுத்தி முத­லா­வ­தாக பிலி­யந்­த­லை­யிலும், இரண்­டா­வ­தாக கண்­டி­யிலும் இரு பாரிய கூட்­டங்­களை இந்த அமைப்பு நடத்­தி­யி­ருந்­தது. 

இந்­நி­லை­யி­லேயே இப்­பி­ர­சார நட­வ­டிக்­கையை மேலும் வலு­வாக்கி ஏனைய மாவட்­டங்கள் தோறும் முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தேர்­தல்கள் நெருங்­கு­வ­தனால் மக்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பை மையப்­ப­டுத்­திய கருத்­துக்­களை பிர­தா­னப்­ப­டுத்தி வாக்­கு­களை சேக­ரிக்கும் செயற்­பா­டு­களை அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் முன்­னெ­டுக்கும் என்­பதால் இடைக்­கால அறிக்கை தொடர்­பான மாற்­றுக்­க­ருத்­துக்­களை மக்கள் மத்­தியில் கொண்டு செல்­வ­தற்குமான வகை­யி­லேயே இந்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

எவ்­வா­றா­யினும் தற்­போது நிகழ்­ச்சி நி­ர­லி­டப்­பட்­டுள்ள கேகாலை, அநு­ரா­த­புரம், காலி ஆகிய மூன்று கூட்­டங்­களும் வழ­மை­போன்று முன்னாள் பாது­காப்­புச்­செ­ய­லாளர் கோத்தபாயவின் பிரசன்னத்துடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை வியத்மய எனப்படும் தொழில் வாண்மையாளர்களின் அமைப் பும் மாவட்ட ரீதியாக தொழில் வாண்மை யாளர்களை ஒருங்கிணைத்து பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள் வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வுள்ளதாகவும் அறியமுடிகின்றது. 

2 comments:

  1. இந்த கூட்டங்கள் இனத் த​வேசத்தை முன்வைத்து நடத்தப்பட உள்ளன. எனவே மக்கள் நிதானமாகவும் அமைதியுடனும் அவற்றில் கலந்து கொள்ளாது தவிர்ப்பது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.

    ReplyDelete
  2. Muslims should not suppprt or participate any of their agenda.

    ReplyDelete

Powered by Blogger.