புலிகளின் எச்சங்கள், இனவாதத்தீயை மூட்ட சதி - பாராளுமன்றத்தில் ஹரீஸ் தெரிவிப்பு
புலிகள் விட்டுச் சென்ற எச்சங்களாக காணப்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் கல்முனைத் தாயகத்தின் வரலாற்றினைத் திரிபுபடுத்தி இனவாதத்தீயை மூட்டுவதற்கு முயல்வதாக குற்றம் சாட்டிய பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தற்போது அம்பாறை மாவட்டத்தின் இதயமான கல்முனைத் தாயக பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளால் பதற்றமான நிலைமையொன்று நீடிக்கின்றது. இரு சமூகங்களிடையே அமைதியற்ற நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் கல்முனை நகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் வரலாற்றைத் திரிபுபடுத்தி வெளியிடும் கருத்துக்களால் மக்கள் மத்தியில் குரோதத்தினை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் முஸ்லிம் தலைவர்கள் தொடர்பாக முழுக்க முழுக்க தவறான கருத்தையும், முஸ்லிம் மக்கள் பற்றி பிழையான சிந்தனையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையும் பரப்பி வருகின்றனர்.
இது உண்மையிலேயே தவறானதாகும். தாயகமான கல்முனையின் வரலாற்றினை எடுத்துக்கொண்டால் 1892 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 18 ஆம் இலக்க பட்டின சபைகள் சட்டத்தின் படி புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டன. 1897 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 19ஆம் திகதி அன்றிருந்த ஆளுநர் சேர் ரிஜ்வேயினால் கல்முனை பட்டின சபையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கில் நற்பிட்டிமுனை வீதியின் கடற்கரைநோக்கியும், தெற்கே சாய்ந்த மருது கிராமத்தின் எல்லையும் மேற்கே வயலும், கிழக்கே கடலும் இருந்தன.
1947 ஆம் ஆண்டு பட்டினசபைகள் சட்டத்தின் படியாக கல்முனை பட்டின சபையாக தரமுயர்த்தப்பட்டு 7 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டன. 2 வட்டாரங்கள் தமிழ் மக்களுக்காகவும், 5 வட்டாரங்கள் முஸ்லிம்களுக்குமாக ஒதுக்கப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் அன்றைய தேர்தலில் 5 முஸ்லிம் உறுப்பினர்களும், 2 தமிழ் உறுப்பினர்களும் தெரிவாகினார்கள்.
இத்தகைய வரலாற்றைக் கொண்டிருக்கும் கல்முனையில் 75 சதவீதத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்களுக்கும் மிகுதி தமிழர்களுக்குமாக நான்கு சபைகள் உருவாக்கப்பட வேண்டும். பிரிட்டிஷாரின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லைகளைக் கொண்டதாகவே இவை அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடகும். இதுவே யதார்த்த பூர்வமான நியாயமுமாகும்.
இத்தகைய நிலையில் தற்போது இந்த வரலாறுகளையெல்லாம் திரிபுபடுத்தி கல்முனையில், அம்பாறை மாவட்டத்தில் சகோதரத்துவத்துடன் வாழும் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதற்கு சில தமிழ் தலைமைகள் கடுமையான முயற்சிகளை எடுக்கின்றன. இரு சமூகங்களுக்குள்ளும் இனவாத தீயினை மூட்டுகின்றார்கள்.
குறிப்பாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாக செயற்பட்டதாக பிழையான தகவல்கள் மக்கள் மத்தியில் கூறப்படுகின்றன. விடுதலைப் புலிகள் நாட்டை குட்டிச்சுவராக்கிட்டுச் சென்றனர். தற்போது அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்கள் கல்முனையில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குலைத்து சமூகங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தும் முயற்சியில் இனவாதத் தீயினை மூட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
இவர்கள் ஒரு விடயத்தினை புரிந்து கொள்ள வேண்டும். கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் தமிழர்கள் கொழும்பில் வசிப்பதாகக் கூறுகின்றபோதும், கல்முனையில் வாழும் முஸ்லிம்கள் கல்முனை என்று கூறமுடியாதுள்ளது. கல்முனை முஸ்லிம்களுக்குச் சொந்தமானது அல்ல. அவர்களுக்கு கல்முனைக்குடியே சொந்தமானது என்று கூறுகின்றார்கள். இந்த நிலைமையை யார் ஏற்படுத்துகின்றார்கள். எதற்கு ஏற்படுத்துகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
இச்சமயத்தில் அக்கிராசனத்தில் இருந்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி இத்தகைய செயற்பாடுகளை யார் முன்னெடுக்கின்றார்கள் என்று கேள்வியெழுப்பியபோது,
சில தமிழ் அரசியல்வாதிகளே என பதிலளித்த பிரதியமைச்சர், கல்முனை தொடர்பில் முஸ்லிம்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். கல்முனையை செதுக்குவதில், எம்.எஸ், காரியப்பர், ஏ.சி.ஹமீட், மன்சூர், அஷ்ரப், போன்ற தலைவர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்தவழியில் நானும் எனது பங்களிப்பினை செய்வேன். வட, கிழக்கில் சமஷ்டியை கோரும் தரப்பினர் கல்முனையில் இரு சமூகங்களுக்கிடையிலான விரிசலை ஏற்படுத்த முயலக்கூடாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதும் இல்லை என்றார்.
-விடிவெள்ளி-
கோடீஸ்உவரன் MP சொன்னது 100% உண்மை.
ReplyDeleteஉண்மையை சொன்னால் புலிகளா?
இனவாதம் தூண்டுவது NE இணைப்பை எதிர்கும் ISIS முஸ்லிம் ஆதரவாளர்கள் மட்டுமே.
வட, கிழக்கு இணைப்பைக் கூறுவதே இனவாதம்தான்.
ReplyDeleteதமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்கள்தான், இப்படியான அர்த்தமற்ற இணைப்பைக் கோருகிறார்கள்.
பிரதர் ஹரீஸ் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மை.
இணைப்பு என்பது வெறும் கானல் நீர்.
இனவாதி கோடீஸ்வரன் ஒரு புலி பயங்கரவாதி. அனைத்தையும் மாற்றி தமிழ் ஈழம் உருவாக்க பார்க்கின்றான்.
ReplyDeleteஎன்று ISIS முஸ்லிம் பயங்கரவாதியான Gt x கண்டுபிடித்துள்ளாரு.
DeleteAll easten Tamil speaking people Muslim people ,if you don't agree or not north and east will be merged again according to the India and Sri Lanka accord.Sri Lanka can be two languages speaking united country forever but can't be divided by the name of religion.
ReplyDeleteIf you don't agree then forget about your mother tongue TAMIL ...Learn URUDU and fights for your right.
God bless you All!!
கேடீஸ்டாரன் என்ற கேடி, முன்னாள் தமிழ் பயங்கரவாதி.
ReplyDeleteஇந்தாளின் கருத்துக்களை, இந்தாளின் நாயும் மதிப்பதில்லை.
கொஞ்சம் விட்டு வையுங்கள்.
ReplyDeleteபாவம்.
நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் நல்லாட்சியில் வடக்கும் கிழக்கும் இணையும் என்ற நப்பாசையில் இந்த பாசிச புலி எச்சங்கள் இருந்துவிட்டுப்போகட்டும்.
இனவாத இந்துக்கள் கல்முனைனையின் வரலாறை துவேசத்துடன் மாற்ற நிணைப்பது கல்முனையில் இந்துக்கள் அழிவுக்கே வழிவகுக்கும்,,,
ReplyDelete