Header Ads



"சந்திரிக்கா வெட்கப்பட வேண்டும்"


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு எந்த அருகதையுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...

கூட்டு எதிர்க்கட்சியுடன் சமாதானம் பேச வருபவர்களுக்கு கன்னத்தில் அறைந்து அனுப்புவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். இவருடன் சமாதானம் பேச செல்ல வேண்டிய எந்த தேவையும் கூட்டு எதிர்க்கட்சிக்கு இல்லை. 

இவர் ஒரு காலத்தில் இலங்கை ஜனாதிபதியாகவும் சு.காவின் தலைவியாகவும் இருந்திருக்கலாம். அந்த நினைப்பு தற்போதும் அவரது உள்ளத்தை விட்டகலாததால் இப்படி அவர் உளறிக்கொண்டிருக்கலாம். 

தற்போது இவர் சு.கவின் அத்தனகல தொகுதியின் அமைப்பாளர் மாத்திரமே. ஒரு தொகுதி அமைப்பாளருடன் சமாதானம் பேசச் செல்ல வேண்டிய எந்த தேவையும் எமக்கில்லை. ஏனையோருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஒரு தொகுதியின் அமைப்பாளராக இருக்க வெட்கப்பட வேண்டும். அது தான் அவருக்கு தற்போது மக்கள் மத்தியில் உள்ள மதிப்பாகும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தற்போது ஜனாதியாக இல்லாது போனாலும் தனது மக்கள் செல்வாக்கால் இவ்வரசையே அசைத்து பார்க்கின்றார்.இது தான் அவருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்திலேயே சு.க மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. மூன்றில் இரண்டு பெரும் பான்மையை சாதாரணமாக வைத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவோ தனது ஆட்சிக் காலப்பகுதியில் ஆட்சி செய்ய முடியாமல்  2002ம் ஆண்டு ஆட்சியை ரணிலிடம் பகிரும் நிலைக்கு தள்ளப்பட்டார். மிகவும் உறுதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான சு.காவின் ஆட்சியை நரித்தனமாக வீழ்த்தி சு.காவின் பரம விரோதிகளான ஐ,தே.கவில் கையில்  ஆட்சி செல்ல வித்திட்டு  சு.காவுக்கு மிகப் பெரும் துரோகமிளைத்த முதன்மையானவர்களில் ஒருவர் இந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவாகும். இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பற்றியோ சு.க பற்றியோ கதைக்க எந்த தகுதியும் அற்றவர்.

No comments

Powered by Blogger.