தேசிய கொடியை ஏற்றமறுத்த, வடமாகாண கல்வியமைச்சர்
வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவிப்பரானால், அவர் அந்த பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்று கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பிரதானியாக வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஷ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த பாடசாலையின் அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு, நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதுதொடர்பில் கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அது பிழை என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைவதுடன், தேசிய கொடிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவர் மறுப்பாரானால், அவர் அந்த பதவியில் தொடர்வதற்கு தகுதியானவர் இல்லை என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேற்படி அமைச்சனின் பிராஜா உரிமை பறிக்கப்பட வேண்டும் என மட்டும் யாரும் கேட்காதூங்க! அவர் பல தேர்தல்களை சந்திக்க வேண்டும்
ReplyDeleteதேசியக்கொடி ஏற்றாவிட்டால் பிரஜா உரிமை இல்லை என எந்தச் சட்டத்தில் உள்ளது?
ReplyDelete