Header Ads



பாதுகாப்பு வேலிகளை உடைத்து, விமான நிலையத்துக்குள் புகுந்த யானைகள்


தமது நிரந்தர வதிவிடத்தைத் தேடி யானைகள் சில மத்தள விமான நிலையத்துக்குள் புகுந்த சம்பவங்கள் கடந்த பல நாட்களாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானநிலையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு யானைகள் உள் நுழைந்ததாகவும்,பின்னர் இவற்றை துரத்தும் நடவடிக்கையில் ஹம்பாந்தோட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களினால் காட்டு யானைகளின் இருப்பிடங்களுக்கு கேள்வி குறியாகியுள்ளதாலேயே யானைகள் விமானநிலையத்தை நோக்கி படையெடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.