ஒரு காலமும் தப்பிக்க முடியாது, என்பதை அறிந்து கொண்டேன்...
சிரித்தேன் உனக்கு வெட்கமில்லையா என்றார்கள்.
அழுதேன் உனக்கு புன்னகையே வராதா என்றார்கள்.
புன்னகைத்தேன் நயவஞ்சகப் புன்னகை என்றார்கள்.
கொஞ்சம் கடுகடுத்தேன் உள்ளே உள்ளதை இப்பொழுது வெளிப்படுத்திவிட்டான் என்றார்கள்.
மௌனமாகிவிட்டேன் பேசத்தெரியாதவன் என்றார்கள்.
பேசினேன் ஓயாது பேசும் ஓட்டை வாயன் என்றார்கள்.
சொன்னவையெல்லாம் கேட்டு சகித்துக் கொண்டேன் கோழை என்றார்கள்.
பழிவாங்க சக்திபெற்றிருப்பின் பழிவாங்கி விடுவான் என்றும் சொன்னார்கள்.
கடைசியில் மனிதர்களை எவ்வகையில் திருப்திப் படுத்தப்போனாலும் அவர்களின் பழிப்பிலிருந்து, ஒரு காலமும் தப்பிக்க முடியாது என்பதை மட்டும் உறுதியாக அறிந்து கொண்டேன்.
கலாநிதி-முஹம்மத் பின் ழாபிர் அஷ்ஷஹ்ரீ,
தமிழில் -அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.
Post a Comment