Header Ads



இலங்கைக்கு புயல் ஆபத்து – அமெரிக்கா முன்னறிவிப்பு எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் சிறிலங்காவும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் இருந்து இந்தப் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 28ஆம் நாள் வரை கடுமையான மழை தொடக்கம் மிகக் கடுமையான மழை வரை, சிறிலங்காவிலும், தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளிலும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.