அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், கசிப்பு வியாபாரிகளே அதிகமாக இருப்பார்கள்
தொகுதிவாரித் தேர்தல் முறைமை காரணமாக அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் கசிப்பு வியாபாரிகளே அதிகமாக இருப்பார்கள் என்றும் இவர்களே அரசுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கும் குழுவாக தற்போது மாறியுள்ளதாகவும் விசேட செயற்றிட்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் “நாட்டில் கசிப்பு பாவனை தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறான வர்த்தகத்தில் ஈடுபடுவோரே ஊழல் மோசடிகளுக்கும் காரணமாக இருக்கிறார்கள்.
அதேநேரம், அரசியலில் அழுத்தம் கொடுக்கும் குழுவாகவும் தற்போது மாறியுள்ள அவர்களது தலையீடானது, அடுத்து நடைபெறவுள்ள பிரதேசசபை, பாராளுமன்றத் தேர்தல்களிலும் அதிகமாகவே இருக்கும் என்பதை என்னால் தைரியமாகக் கூறமுடியும்.
ஏன், எதிர்க்காலத்தில் பாராளுமன்றிலும் இவர்களது எண்ணிக்கை அதிகமாகவே அமையப்போகிறது.“ எனக் குறிப்பிட்டார்.
Post a Comment