சவப்பெட்டியில் கசிப்பு போத்தல்
சவப்பெட்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக கசிப்பு போத்தல்களை கடத்திய மலர்ச் சாலை உரிமையாளர் ஒருவரையும் அதன் ஊழியரையும் கைது செய்து ள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மலர்சாலையின் உரிமையாளர் கசிப்பு வர்த்தகத்தில் ஈடுபடுவதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விக்ரமரத்னவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான மலர்சாலை உரிமையாளர் சவப்பெட்டியினுள் சடலங்களை வைப்பதுபோன்று கசிப்பு போத்தலகளை மறைத்து வைத்து பிரேத வாகனத்தின் ஊடாக கொண்டு சென்று விநியோகித்து வந்துள்ளதாகவும், இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸாரிடம் தாம் அகப்பட்டதில்லை என்றும் கைது செய்யப்பட்ட ஊழியர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பீ. ஆர்.பி. சேனாநாயக்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுனில் விஜேகுணவர்தன ஆகியோரின் உத்தரவுக்கமைய பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பீ.பீ. எல். விக்ரமரத்ன, உப பொலிஸ் பரிசோதகர் சமீர சம்பத் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment