Header Ads



சவப்­பெட்­டியில் கசிப்பு போத்­தல்


சவப்­பெட்­டியில் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் சட்­ட­வி­ரோ­த­மாக கசிப்பு போத்­தல்­களை கடத்­திய மலர்ச் சாலை உரி­மை­யாளர் ஒரு­வ­ரையும் அதன் ஊழி­ய­ரையும் கைது செய்து ள்ளதாக பண்­டா­ர­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்த மலர்­சா­லையின் உரி­மை­யாளர் கசிப்பு வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­வ­தாக பண்­டா­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி விக்­ர­ம­ரத்­ன­வுக்கு கிடைத்த தக­வ­லொன்­றுக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பின் போதே சந்­தே­க­ந­பர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தே­க­ந­ப­ரான மலர்­சாலை உரி­மை­யாளர் சவப்­பெட்­டி­யினுள் சட­லங்­களை வைப்­ப­து­போன்று கசிப்பு போத்­த­ல­களை மறைத்து வைத்து பிரேத வாக­னத்தின் ஊடாக கொண்டு சென்று விநி­யோ­கித்து வந்­துள்­ள­தா­கவும், இதற்கு முன்னர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பொலி­ஸா­ரிடம் தாம் அகப்­பட்­ட­தில்லை என்றும் கைது செய்­யப்­பட்ட ஊழியர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

பாணந்­துறை பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­சகர் பீ. ஆர்.பி. சேனா­நா­யக்க, உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுனில் விஜே­கு­ண­வர்­தன ஆகி­யோரின் உத்­த­ர­வுக்­க­மைய பண்­டா­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரிசோதகர் பீ.பீ. எல். விக்ரமரத்ன, உப பொலிஸ் பரிசோதகர் சமீர சம்பத் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.