மஹிந்தவை சந்தித்தேன்; ஒப்புக்கொண்டார் மைத்திரி
மஹிந்தவை சந்தித்தேன்; உண்மையை ஒப்புக்கொண்டார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னணி தேரர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த தகவலை உறுதிசெய்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு தயாராகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பான நிலை குறித்து கேட்பதற்காக நாயக்க தேரர்கள் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
இந்த கலந்துரையாடலின்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதுடன், தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றதை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் நீண்ட சுமூக பேச்சுவார்ததை இடம்பெற்றதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சந்திப்பு தொடர்பில் நாயக்க தேரரிடம் அவர் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார்.
இன்னாள் முன்னாள் ஜனாதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பின் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உறவினரான வர்த்தகர் ட்டலி சிறிசேனவில் வீட்டில் இடம்பெற்றிருந்தாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What a shame?
ReplyDelete