ஹக்கீமுக்கு, றிசாத் பச்சைக் கொடி
கல்முனை மாநகர சபையை நான்கு பிரதேச சபைகளாகப் பிரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் கலந்து பேசி ஓர் இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தயாராக இருப்பதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கும் நிலையில் அவரது ஊடகப் பிரிவு அமைச்சின் இத் தீர்மானத்தை தெரிவித்தது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் நாடு திரும்பியதும் உடனடியாக அமைச்சர் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையை நான்கு பிரதேச சபைகளாகப் பிரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில் தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக ரிசாத் பதியுதீனும் ரவூப் ஹக்கீமும் மக்களுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது;
அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதேவேளை கல்முனை பிரதேச மக்களின் கோரிக்கை தொடர்பிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கலந்துரையாடுவதற்கு ஆயத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்வதற்கு அவரைப் பலமுறை முயன்றபோதும் அமைச்சரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
ரிசாதின் ஊடகதுரை பிரிவினருக்கு வாங்கோழியின் நடனம் மயிலின் நடன தோரனைக்கு ஈடாகுமா ரிசாத் எப்போதும் ரவூபை சந்திக்க முயற்சிக்கின்றார்தாம் ஆனால் முடியவில்லை காரணம் தீயசக்திகளால் முஸ்லிம்காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை இல்லாமல் ஆக்க அதன் தலைவருக்கு எதிராக உருவாக்கப்பட்டவர்தான் இந்த அவருடன் இந்த ரவூஹக்கீம் என்ன கதைக்கவேண்டும் அவர் இஸ்லாமிய கட்சிகு தலைவர் என்ற வகையில் அந்த பகுதியில் உள்ள முன்னய தற்போதய அமைச்சர்களை சந்தித்து உரையாடி தீர்கமான முடிவுகள் எடுப்பது கடைமை இதனை விட்டு விட்டு வடக்கில் வாழும் ஒரு அமச்சருடன் கதைப்பதால் சாய்ந்தருதில் உள்ளமக்கின் கஸ்டநஸ்டங்களால் இவருக்கு என்ன குறையும் இதில் வியாபார சம்பத்தப்பட் விடயங்கள் இருந்தால் அவருடன் கலந்துரையாடுவதற்கு வாய்புகள் உண்டு ஆனால் ரவூப் ஹகீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் அவருக்கு இந்த விடயத்தில் பொருப்பு உண்டு அப்படி ரிசாதுடன் கதைத்தால் ஏனைய கட்சிதலைவர்களுடனும் ரவூப்ஹகீம் கலந்துரையாட வேண்டுமென்று உங்களுக்கு உணர்துகின்றேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAvargall eppo roomba busy
ReplyDeleteNo seperation pls
ReplyDeleteKalmunai should be divided according to Muslims aspiration.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete