Header Ads



தீர்மானிக்கும் பொறுப்பை, கையளித்து விட்டேன் - மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுவிடம் கையளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தமது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

எனினும் தேர்தல்கள் குறித்து இந்தக் கூட்டத்தின்போது எவ்விதமான இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டு எதிரணியினருக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுவிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.