Header Ads



தனியார் பஸ்­ஸில் இப்படியும் நடந்தது...

தனது தலை­முடி பிறி­தொரு மாண­வியின் புத்­த­கப்பை ஸிப்பில் மாட்டிக் கொண்­டதால் பஸ்­ஸி­லி­ருந்து இறங்க முடி­யாமல் தவித்த மாண­வியை பஸ்­ஸி­ருந்து பல­வந்­த­மாக கீழே இறக்­கி­விட்டு அவ­ரது தலை­முடி அறுந்து வேறா­வ­தற்கு கார­ண­மா­கிய தனியார் பஸ் நடத்­துநர் ஒரு­வரை பண்­டா­ர­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தலை­முடி பிய்த்­தெ­டுக்­கப்­பட்­ட­தனால் தலையில் கடுமையான வேதனை ஏற்­பட்டு குறித்த மாணவி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

பிலி­யந்­த­லை­யி­லி­ருந்து பண்­டா­ர­கமை நோக்கி சேவையில் ஈடு­படும் தனியார் பஸ் ஒன்றில் இம்­மா­ணவி சக மாண­வர்கள் சில­ருடன் பாட­சாலை நிறை­வ­டைந்து வீடு நோக்கி பய­ணித்­துள்ளார்.

இந்­நி­லையில், தான் இறங்க வேண்­டிய இடத்தை அண்­மித்­த­வுடன் அம்­மா­ண­வியின் தலை­முடி பிறி­தொரு மாண­வியின் புத்­த­கப்பை ஸிப்பில் சிக்­கி­யுள்­ளது. அதன்­போது மாண­வியும் அவ­ரது நண்­பியும் தலை­மு­டியை ஸிப்­பி­லி­ருந்து பிரித்­தெ­டுக்க முயற்­சித்­தி­ருந்த போதிலும் முயற்சி பல­ன­ளிக்­காது போயுள்­ளது.

அவர் இறங்­கும்­வரை பஸ் நிறுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், பஸ் புறப்­ப­டு­வ­தற்கு தாம­த­மா­வ­தாக தெரி­வித்த பஸ் நடத்­துநர், மாண­வியின் தலை­முடி ஸிப்பில் சிக்­குண்­டி­ருந்த நிலை­யி­லேயே இரக்­க­மற்ற முறையில் அவரைப் பிடித்து வெளியே தள்­ளி­யதில் சிக்­குண்­டி­ருந்த முடி உட்­பட சுமார் 1 அடி நீள­மான மாண­வியின் தலை­முடி அறுந்­து­போ­யுள்­ளது.

இதனால் கடும் வேத­னைக்­குள்­ளான மாணவி, வீட்­டுக்கு சென்று தனது பெற்­றோ­ரிடம் விட­யத்தை தெரி­வித்­த­துடன், அவ­ரது பெற்றோர் இது தொடர்பில் பண்­டா­ர­கமை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­த­னை­ய­டுத்து மாண­வியை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

இந்­நி­லையில், முறைப்­பாட்­டுக்­க­மைய விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த பொலிஸார் சந்­தேக நப­ரான 43 வய­து­டைய பஸ் நடத்­து­நரை கைது செய்­த­துடன் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.