Header Ads



ஜிந்தோட்ட முஸ்லிம்களின், கண்ணீர் வாக்குமூலம் (நேரடி றிப்போர்ட்)


-MBM.Fairooz-

பொலி­ஸாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க, அவர்கள் முன்­னி­லை­யி­லேயே குண்­டர்கள் தமது வீடு­களைத் தாக்­கி­ய­தாகக் குற்­றம்­சாட்டும் கிந்­தோட்டை பிர­தேச முஸ்லிம் மக்கள்,  பிர­தே­சத்தில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­விய நிலையில் பாது­காப்புப் படை­யி­னரை பின்­வாங்கச் செய்­து­விட்டே இந்தத் தாக்­குதல் முஸ்­லிம்கள் மீது  நடத்­தப்­பட்­ட­தா­கவும் அவ்­வா­றெனில் இதன் பின்­ன­ணியில் செயற்­பட்ட மறை­கரம் யார் என்­பதை கண்­ட­றிந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களைத் தொடர்ந்து அப் பகு­திக்கு விஜயம் செய்த பிர­தமர், அமைச்­சர்கள், பொலிஸ் மா அதிபர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ரி­டமே பாதிக்­கப்­பட்ட மக்கள் நேரில் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.

இதன்­போது இப் பிர­தேச மக்கள் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,  இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் பௌத்த மத குருக்களும் இருப்­ப­தா­கவே நாம் நம்­பு­கிறோம். இப் பகு­தியில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்ற சம்­ப­வங்கள் கார­ண­மாக நாம் அச்­சத்­தி­லேயே காலத்தைக் கடத்­தினோம்.  பிர­தே­சத்தில் பதற்றம் நில­வி­யதைத் தொடர்ந்து வியா­ழக்­கி­ழமை முதல்  பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதனால் முஸ்­லிம்கள் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நம்­பினர்.

எனினும், வியா­ழக்­கி­ழமை மாலை பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் திருப்­பி­ய­ழைக்­கப்­பட்­டனர். ஓரிரு சந்­தி­களில் மாத்­திரம் சிலர் கட­மையில் இருந்­தனர். இந் நிலை­யி­லேயே இரவு 7.30 மணி­ய­ளவில் சுமார் 200 பேர­டங்­கிய குண்­டர்கள் கிந்­தோட்­டை­யின் பல பகு­தி­க­ளுக்­குள்ளும் புகுந்து முஸ்­லிம்­களின் வீடு­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தினர்.

நாம் இவர்­களைத் தடுத்து நிறுத்தி எமது வீடு­க­ளையும் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் பாது­காக்­கு­மாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்ட போதிலும் பொலி­சாரோ இரா­ணு­வத்­தி­னரோ தமது கட­மையைச் செய்ய முன்­வ­ராது வேடிக்கை பார்த்­தனர். சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக எமது பகு­தி­களில், ஒவ்­வொரு வீடு­க­ளிலும் இரு­பது நிமி­டங்­க­ளுக்கும் மேல் தரித்து நின்று தாக்­குதல் நடத்­தினர்.

தாக்­குதல் நடத்த வந்­த­வர்­களின் பிர­தான நோக்கம் எமது பணத்­தையும் நகை­க­ளையும் பெறு­ம­தி­மிக்க பொருட்­க­ளையும் கொள்­ளை­ய­டிப்­ப­தாகும். நாங்கள் எங்கள் வீடு­க­ளுக்குள் உயி­ருக்கு அஞ்சி மறைந்­தி­ருந்த நிலையில் எங்கள் கண் முன்­னா­லேயே கொள்­ளை­ய­டித்துச் சென்­றனர். தள­பா­டங்­களை உடைத்து நொறுக்­கினர். வாக­னங்­களைத் தீயிட்டுக் கொளுத்­தினர். சில­ரது கழுத்தில் கத்­தி­களை வைத்து கொல்லப் போவ­தாக அச்­சு­றுத்­தினர்.

இத்­தனை சம்­ப­வங்கள் நடந்த போதிலும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பொலி­சாரும் வேடிக்கை பார்த்­த­மையும் பதற்றமான சூழல் நிலவிய போதிலும் திடீரென பாதுகாப்பு படையினர் வாபஸ் பெறப்பட்டமையும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கிந்தோட்டை பிரதேச முஸ்லிம்கள் மேலும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.