Header Ads



சூறாவளி உருவாகும் சாத்தியம், வளிமண்டலவியல் திணைக்களம்


ஏற்கனவே உருவாகியிருந்த தாழமுக்கமானது அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தற்போது காலியிலிருந்து வடமேற்காக 185 கிலோமீற்றர் தூரத்திலும் கொழும்பிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது மேற்கு வடமேற்கு திசையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை காணப்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.