Header Ads



மாணவனை நிர்வாணப்படுத்திய பொலிஸார்

காவல்துறையினரால் பொது இடத்தில் வைத்து நிர்வாணமாக்கப்பட்டதன் காரணமாக அசௌகரியத்திற்கு உள்ளான மாணவன் தொடர்பான தகவல் சிலாபம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதன் காரணமாக குறித்த மாணவன் பாடசாலை செல்லாமல் சில காலம் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதாக சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்தமுறை இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற வேண்டிய குறித்த மாணவன், இந்த சம்பவம் காரணமாக படிப்பில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த தினம் சுற்றிவளைப்பு ஒன்றிற்காக சென்ற சிலாபம் காவல்துறையினர், குறித்த சிறுவனை பொது இடத்தில் வைத்து உடைகளை களைய செய்துள்ளனர்.

இதன்போது, சிறுவனின் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் இருந்துள்ளதகாவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.