Header Ads



இடமாற்றம் தருமாறு எனது, அலுவலகத்துக்கு வரவேண்டாம்

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு கடமையாற்ற செல்லுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு இன்று  -29- கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

அத்துடன், இடமாற்றங்களை பெற்றுத்தருமாறு கோரி தமது அலுவலகத்துக்கு வருகைத்தருவதை தவிர்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை பின்னடைந்து வருகிறது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், கல்வி திணைக்களமும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவிய பாடசாலைகளை தெரிவு செய்தே பட்டதாரி ஆசிரியர்களை அதற்கு நியமித்தது.

எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று கிராமப்புர மக்களையும், கிழக்கு மாகாணத்தையும் கல்வியில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.