ஆட்டுக் கொட்டிலுக்கு தீ வைப்பு, தீயில் கருகிய ஆடுகள்
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவு, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் 228 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் ஆட்டுக் கொட்டிலொன்று, இன்று (25) அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இக்கொட்டிலில் இருந்த பெரிய ஆடுகள் 5 தீயில் கருகி இறந்துள்ளனவென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
Post a Comment