Header Ads



பிரதமர் விசேட உரை, கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம், பாராளுமன்றமும் நேரத்துடன் முடிவு

நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற வானிலை மாற்றங்களால் ஏற்பட்டுவரும் அனர்த்தங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு, உடனடி உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென, நாடாளுமன்றத்தில. சற்றுமுன்னர் விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர்; ரணில் விக்கிரமசிங்கள் தெரிவித்தார்.

இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டமொன்று, இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, சபை நடவடிக்கைகளை, மாலை 6 மணியுடன் நிறைவுசெய்யவுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
இதன் பிரகாரம், மாலை 7.30 மணிவரை நடைபெறும் சபை நடவடிக்கைகள், இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.