பைசர் முஸ்தபாவிற்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக ஜே.வி.பி கட்சியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள ஏனைய அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருவதனை எதிர்த்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment