"சாய்ந்தமருது" சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று, பைசரின் தலைமையில் பேச்சு
கல்முனை விவகாரம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் தலைவர்களது அடுத்தகட்ட உயர்மட்ட சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனது அலுவலகத்தில் இன்று -22- புதன்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
கல்முனை உள்ளூராட்சி சபை விவகாரம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான கூட்டம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
அதற்கமைய இந்த இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. அதனிடையில் இருதரப்பிலுமிருந்து தெரிவாகும் ஐவர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றன. தமிழர் தரப்பிலிருந்து தெரிவான ஐவர் கொண்ட குழுவின் விபரம் வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி., ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், ரெலோ கட்சியின் உபதலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றி மகேந்திரன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment