Header Ads



பிரபாகரன் உயிருடன் வாழ்ந்து, எம்மை வழிநடத்துகிறார்


புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக விடுதலை புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வு துறை தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம்(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இன்று எம்முடன் இல்லையென ஒருசிலர் கூறிவருகின்றனர்.

அதை நான் முற்றாக மறுக்கின்றேன் எமது தலைவர் ஆறு இலட்சம் மக்களின் உள்ளங்களில் உயிருடனேயே வாழ்ந்து எம்மை வழிநடத்திக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது உத்தரவுக்கு அமையவே எமது செயற்பாடுகள் தொடர்ந்துக்கொண்டிருப்பதாகவும், மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் வரை எங்களது பயணம் ஓயமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் விடுதலைப் புலிகள் என்பதை பலரும் கூறி வருகின்றன. ஏன் அரசாங்கமே அப்படிதான் சொல்லுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர் நாங்கள் ஏன் வேறு செயற்பாடுகளில் இறங்க வேண்டும் என்றும் இன்பராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

3 comments:

  1. Pure hallucination.
    Prabaharan was possessed too and destroyed Tamils

    ReplyDelete
  2. இவனின் படத்தைப் போட்டு, ஏன்தான் யாழ் இணையம் நேரத்தை வீணடிக்குதோ தெரியவில்லை?

    ReplyDelete

Powered by Blogger.